அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் ( கோப் குழு) கூட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கட்டுமானப் தொழில்துறை அபிவிருத்தி அதிகார சபையின் (CIDA) அதிகாரிகள் இருவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாகவும், அந்த மன்னிப்பை ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டத்தில், குறித்த அதிகார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது அதன் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் நடத்தை குறித்து கவலைகள் எழுந்ததாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாவதற்குரிய உரிய ஆடை விதிமுறைகளை பின்பற்றாமல் வருகை தந்துள்ளார். மேலும், அவ்விரு அதிகாரிகளும் கோப் குழுத் தலைவரின் முன்அனுமதியைப் பெறாமல் கூட்டத்தின் நடுவே வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளும் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணைகளின் போது, தங்களின் செயலின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அதிகாரிகள் இருவரும் தங்களின் மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொண்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கண்ணியம் மற்றும் வழிமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்து கொண்டதைக் கருத்திற் கொண்டு, குழுவின் தலைவருடன் இணைந்து ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாகும் அனைத்து நபர்களும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தைப் பேண வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டத்தில், குறித்த அதிகார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது அதன் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் நடத்தை குறித்து கவலைகள் எழுந்ததாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாவதற்குரிய உரிய ஆடை விதிமுறைகளை பின்பற்றாமல் வருகை தந்துள்ளார். மேலும், அவ்விரு அதிகாரிகளும் கோப் குழுத் தலைவரின் முன்அனுமதியைப் பெறாமல் கூட்டத்தின் நடுவே வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளும் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணைகளின் போது, தங்களின் செயலின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அதிகாரிகள் இருவரும் தங்களின் மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொண்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கண்ணியம் மற்றும் வழிமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்து கொண்டதைக் கருத்திற் கொண்டு, குழுவின் தலைவருடன் இணைந்து ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாகும் அனைத்து நபர்களும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தைப் பேண வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
Latest News
முதலமைச்சர் விவகாரத்தில் சமரசமா? மன்னிப்பு கேட்ட மார்க்கண்டேயன்!
Local
08 August 2026
"எந்த நிமிடத்தில் தொடங்கினாலும் ரஜினி பணம் தருவார்!" - லதா ரஜினிகாந்த் அதிரடி!
Local
08 August 2026
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
Local
08 August 2026
கணேமுல்ல சஞ்சீவ வழக்கின் முக்கிய சந்தேகநபர் மெகசின் சிறை மோதலில் உயிரிழப்பு
Local
08 August 2026
சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர்கள் சிலருக்கு இடமாற்றம்
Local
08 August 2026
இன்று பல பகுதிகளுக்கு மழை: பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Local
08 August 2026
வத்தளை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் - துப்பாக்கிதாரி உள்ளிட்ட மூவர் கைது
Local
08 August 2026
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனங்கள் உயர்த்தப்படவில்லை: எரிபொருள் கொடுப்பனவே திருத்தப்பட்டது – பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர விளக்கமளிப்பு
Local
08 August 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக வீதியில் இறங்கத் தயாராகும் சட்டத்தரணிகள்
Local
08 August 2026
ஷானி அபேசேகர, பிரதிக் காவல்துறை மா அதிபராக தரமுயர்வு!
Local
08 August 2026