அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் ( கோப் குழு) கூட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கட்டுமானப் தொழில்துறை அபிவிருத்தி அதிகார சபையின் (CIDA) அதிகாரிகள் இருவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாகவும், அந்த மன்னிப்பை ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டத்தில், குறித்த அதிகார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது அதன் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் நடத்தை குறித்து கவலைகள் எழுந்ததாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாவதற்குரிய உரிய ஆடை விதிமுறைகளை பின்பற்றாமல் வருகை தந்துள்ளார். மேலும், அவ்விரு அதிகாரிகளும் கோப் குழுத் தலைவரின் முன்அனுமதியைப் பெறாமல் கூட்டத்தின் நடுவே வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளும் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணைகளின் போது, தங்களின் செயலின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அதிகாரிகள் இருவரும் தங்களின் மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொண்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கண்ணியம் மற்றும் வழிமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்து கொண்டதைக் கருத்திற் கொண்டு, குழுவின் தலைவருடன் இணைந்து ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாகும் அனைத்து நபர்களும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தைப் பேண வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டத்தில், குறித்த அதிகார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது அதன் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் நடத்தை குறித்து கவலைகள் எழுந்ததாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாவதற்குரிய உரிய ஆடை விதிமுறைகளை பின்பற்றாமல் வருகை தந்துள்ளார். மேலும், அவ்விரு அதிகாரிகளும் கோப் குழுத் தலைவரின் முன்அனுமதியைப் பெறாமல் கூட்டத்தின் நடுவே வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளும் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணைகளின் போது, தங்களின் செயலின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அதிகாரிகள் இருவரும் தங்களின் மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொண்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கண்ணியம் மற்றும் வழிமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்து கொண்டதைக் கருத்திற் கொண்டு, குழுவின் தலைவருடன் இணைந்து ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாகும் அனைத்து நபர்களும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தைப் பேண வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
Latest News
கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் பதற்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது: காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அமைதியின்மை!
Local
06 August 2026
மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 250 மெட்ரிக் தொன் 'பெய்லி' பாலங்களை வழங்கியது இந்தியா!
Local
06 August 2026
காவல்துறை மாஅதிபரின் பாதுகாப்பு மற்றும் சாகர காரியவசமின் சர்ச்சை பேச்சு: விசாரணைகளைத் தொடர நீதிமன்றம் அனுமதி!
Local
06 August 2026
அனுமதியற்ற 146 சூதாட்ட இணையதளங்களை முடக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உத்தரவு!
Local
06 August 2026
தெற்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகளில் கடும் கொந்தளிப்பு: கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
06 August 2026
எல் நினோ தாக்கம்: மொனராகலை மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை
Local
06 August 2026
பேருந்துப் பயணக் கட்டணத்தை அட்டைகள் மூலம் செலுத்தும் முறை விரைவில்
Local
06 August 2026
ஏமன் படை முகாம்கள் மீது தாக்குதல்: 30 பேர் பலி, பலர் காயம்
Local
06 August 2026
லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் விலையிலும் மாற்றமில்லை
Local
06 August 2026