புத்தாண்டு அழகி போட்டியின் போது (அவுருது குமாரி) மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் மற்றும் அவருக்கு அந்தப் பாம்பை விற்பனை செய்த நபர் ஆகியோருக்குக் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பெல்லன்விலவில் உள்ள கொழும்பு மாவட்ட வனஜீவிகள் வலய அலுவலகத்தினால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின்கீழ் குறித்த இளம் பெண்ணும், பணத்தைப் பெற்றுக்கொண்டு மலைப்பாம்பை வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜூலை 22 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் இருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதன்பேரில், பாதுகாக்கப்பட்ட விலங்கு ஒன்றை வைத்துக்கொண்டு நடனமாடிய குற்றத்துக்காக இளம் பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கை வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக மற்றைய சந்தேகநபருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட எந்தவொரு வனவிலங்கையும் வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான விதியை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் வனஜீவிகள் திணைக்கள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பெல்லன்விலவில் உள்ள கொழும்பு மாவட்ட வனஜீவிகள் வலய அலுவலகத்தினால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின்கீழ் குறித்த இளம் பெண்ணும், பணத்தைப் பெற்றுக்கொண்டு மலைப்பாம்பை வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜூலை 22 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் இருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதன்பேரில், பாதுகாக்கப்பட்ட விலங்கு ஒன்றை வைத்துக்கொண்டு நடனமாடிய குற்றத்துக்காக இளம் பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கை வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக மற்றைய சந்தேகநபருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட எந்தவொரு வனவிலங்கையும் வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான விதியை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் வனஜீவிகள் திணைக்கள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Latest News
நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தில் இணையும் நடிகை ஸ்ரீலீலா
Local
07 August 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கப் பிரேரணை!
Local
07 August 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு
Local
07 August 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம்
Local
07 August 2026
சிறைச்சாலை மோதல்கள் - ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு
Local
07 August 2026
தனது லயோலா கல்லூரி சிரேஷ்ட மாணவர், தனது வகுப்பு மாணவரைக் கைது செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை
Local
07 August 2026
இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!
Local
07 August 2026
சிறைச்சாலைப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்தல்!
Local
07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கண்ணீர் புகை பிரயோகம்
Local
07 August 2026
சிறைச்சாலைச் சம்பவங்களின் பின்னணியில் சதித்திட்டம் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு!
Local
07 August 2026