நீர்கொழும்பு, தளுபொத - பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறைச்சாலையின் கட்டடங்கள் அல்லது ஏனைய அரச சொத்துகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (7) நள்ளிரவு 12 மணியளவில் சிறைச்சாலை வளாகத்தின் நிலைமை முற்றாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதுடன், பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து மேலதிக பாதுகாப்புப் பிரிவினர் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (8) காலை வேளையில் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் வழமை போல் சிறைச்சாலைக்கு வருகை தந்ததுடன், கைதிகளைச் சந்திப்பதற்கு தேவையான வசதிகளையும் அனுமதியையும் சிறைச்சாலை நிர்வாகம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, சிறைச்சாலையின் அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக 78 கைதிகள் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்களில் 28 கைதிகள் மேலதிக மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறைச்சாலையின் கட்டடங்கள் அல்லது ஏனைய அரச சொத்துகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (7) நள்ளிரவு 12 மணியளவில் சிறைச்சாலை வளாகத்தின் நிலைமை முற்றாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதுடன், பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து மேலதிக பாதுகாப்புப் பிரிவினர் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (8) காலை வேளையில் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் வழமை போல் சிறைச்சாலைக்கு வருகை தந்ததுடன், கைதிகளைச் சந்திப்பதற்கு தேவையான வசதிகளையும் அனுமதியையும் சிறைச்சாலை நிர்வாகம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, சிறைச்சாலையின் அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக 78 கைதிகள் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்களில் 28 கைதிகள் மேலதிக மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Latest News
நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது குறித்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்
Local
09 August 2026
கலாசார விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவதற்குத் தடைகள் ஏற்படாது - பிரதியமைச்சர் விளக்கம்!
Local
09 August 2026
சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? - நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!
Local
09 August 2026
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சிக்கலில் இலங்கை அணி!
Local
09 August 2026
பெண் ஊழியருக்கு பெருந்தொகை பணம் வழங்கினாரா கியானி இன்பான்டினோ?
Local
09 August 2026
அரிய வகை உலோகத்தைக் கைப்பற்ற கடும் போட்டி - ட்ரம்பின் அதிரடி முதலீடு!
Local
09 August 2026
30 ஆண்டுகளில் இரட்டிப்பான உடல் பருமன்: 1.4 கோடி மக்கள் பாதிப்பு!
Local
09 August 2026
பங்களாதேஷை பதறவைத்த 22 வயது இளம் புயல் - 54 ஓட்டங்களுக்கு சுருண்ட பங்களாதேஷ்
Local
09 August 2026
42 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: கொங்கோ அதிரடி முடிவு!
Local
09 August 2026