கோல்டன் குளோப் மற்றும் எம்மி விருதுகளை வென்ற பிரபல ஹொலிவுட் நடிகையும், 'கண்ணிவெடி ஆலோசனை குழுவின்' (Mines Advisory Group - MAG) தூதுவருமான ரொசமண்ட் பைக் (Rosamund Pike) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 17 ஆண்டுகளில் இலங்கையில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்ட மைல்கல்லைக் குறிப்பதே இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமது விஜயத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்குச் சென்ற ரொசமண்ட் பைக், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களையும், விபத்துகளில் இருந்து உயிர்தப்பியவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட கண்ணிவெடி ஆபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் அவர் பங்கேற்றார்.
இதனிடையே, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், கண்ணிவெடிகளற்ற நாடாக மாறுவதற்கான பாதையில் இலங்கை மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 17 ஆண்டுகளில் நாட்டில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
வருடாந்த கண்ணிவெடி விபத்துகளின் எண்ணிக்கை 250 இலிருந்து 2024 ஆம் ஆண்டளவில் 3 ஆகக் குறைவடைந்துள்ளது.
இந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் மூலம் இடம்பெயர்ந்த சுமார் ஒரு மில்லியன் மக்கள் மீண்டும் தங்களது சொந்த வீடுகளுக்குச் சென்று பாதுகாப்பாக வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17 ஆண்டுகளில் இலங்கையில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்ட மைல்கல்லைக் குறிப்பதே இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமது விஜயத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்குச் சென்ற ரொசமண்ட் பைக், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களையும், விபத்துகளில் இருந்து உயிர்தப்பியவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட கண்ணிவெடி ஆபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் அவர் பங்கேற்றார்.
இதனிடையே, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், கண்ணிவெடிகளற்ற நாடாக மாறுவதற்கான பாதையில் இலங்கை மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 17 ஆண்டுகளில் நாட்டில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
வருடாந்த கண்ணிவெடி விபத்துகளின் எண்ணிக்கை 250 இலிருந்து 2024 ஆம் ஆண்டளவில் 3 ஆகக் குறைவடைந்துள்ளது.
இந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் மூலம் இடம்பெயர்ந்த சுமார் ஒரு மில்லியன் மக்கள் மீண்டும் தங்களது சொந்த வீடுகளுக்குச் சென்று பாதுகாப்பாக வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Latest News
செயற்கை உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து - தீவிரமடையும் குடல் நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
Local
13 August 2026
முன்னாள் நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
13 August 2026
படுக்கையிலேயே முடங்கிய நடிகை ஷகீலா : வெளியிட்ட உருக்கமான காணொளி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Local
13 August 2026
இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி - இருவர் கைது!
Local
13 August 2026
'பெக்கோ சமனின்' தாயார் மீதான துப்பாக்கிச்சூடு - சந்தேகநபர்களின் உந்துருளி மீட்பு!
Local
13 August 2026
நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : முதலிடத்தில் எந்த மாவட்டம் - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
Local
13 August 2026
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு
Local
13 August 2026
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
13 August 2026
ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் உயிரிழப்பு : 18 வயது சந்தேகநபர் கைது!
Local
13 August 2026
நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானியப் போர்க்கப்பலின் சிதைவுகள்!
Local
13 August 2026