General09 August 2026

சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள் - போதைப்பொருட்களுடன் இருவர் கைது

பொரளை, மெகசின் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதிகளுக்குப் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைச் சுவரைத் தாண்டி வீசி எறிய முயன்ற இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பேஸ்லைன் வீதியில் உள்ள மெகசின் சிறைச்சாலைச் சுவருக்கு அருகில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதிகளுக்கு வழங்க முயன்ற அந்தப் பொதிகளிலிருந்து பல்வேறு பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

22 கிராம் 250 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள்
02 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள்
250 கிராம் புகையிலை இலைகள்
02 சிறிய கையடக்கத் தொலைபேசி
02 கையடக்க தொலைபேசி மின்னேற்றிகள்
10 இலகுப்பான்கள் (Lighters)
02 ஜோடி காதணிகள் என்பன அடங்கியுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு 14ஐ சேர்ந்த 29 வயதுடையவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes