மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்காக அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதிலேயே அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
"உர மானியம் வழங்குதல், நீர்ப்பாசன அமைப்புகளைப் புனரமைத்தல் அல்லது சிறைச்சாலைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையைஅதிகரிப்பதால் வறுமையோ அல்லது வேலையின்மையோ தீரப்போவதில்லை.
மாறாக, ஒற்றைக் கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் ஆட்சிமுறையை உருவாக்குவதே இதன் மறைமுக நோக்கமாகும். இதனால் நீதித்துறையின் சுயாதீனம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம்,எரிபொருள், உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது வரிகளை விதித்து மக்களைப் பீடித்துள்ளது.
அத்துடன், இளைஞர் கழகங்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்குக் கூட ஆளுங்கட்சியின் அலுவலகப் பட்டியலின் படியே நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
வழக்குத் தாமதத்தைக் காரணம் காட்டி ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முனைப்புக்காட்டும் அரசாங்கம், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நீதியரசர்களுக்கான வெற்றிடங்களைக்கூட இதுவரை நிரப்பவில்லை.
நாட்டின் அபிவிருத்திக்கு பிராந்திய மற்றும் வீட்டுப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் தேசிய திட்டமொன்றே தற்போதைய முதன்மைத் தேவையாகும்" என அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
"உர மானியம் வழங்குதல், நீர்ப்பாசன அமைப்புகளைப் புனரமைத்தல் அல்லது சிறைச்சாலைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையைஅதிகரிப்பதால் வறுமையோ அல்லது வேலையின்மையோ தீரப்போவதில்லை.
மாறாக, ஒற்றைக் கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் ஆட்சிமுறையை உருவாக்குவதே இதன் மறைமுக நோக்கமாகும். இதனால் நீதித்துறையின் சுயாதீனம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம்,எரிபொருள், உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது வரிகளை விதித்து மக்களைப் பீடித்துள்ளது.
அத்துடன், இளைஞர் கழகங்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்குக் கூட ஆளுங்கட்சியின் அலுவலகப் பட்டியலின் படியே நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
வழக்குத் தாமதத்தைக் காரணம் காட்டி ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முனைப்புக்காட்டும் அரசாங்கம், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நீதியரசர்களுக்கான வெற்றிடங்களைக்கூட இதுவரை நிரப்பவில்லை.
நாட்டின் அபிவிருத்திக்கு பிராந்திய மற்றும் வீட்டுப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் தேசிய திட்டமொன்றே தற்போதைய முதன்மைத் தேவையாகும்" என அவர் சுட்டிக்காட்டினார்.
Latest News
மீண்டும் திரையில் விஜய் - த்ரிஷா : ‘வெளியான அதிரடி அறிவிப்பு!
Local
09 August 2026
கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!
Local
09 August 2026
காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!
Local
09 August 2026
அரசாங்கத்தின் முதன்மை இலக்கு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதா? - சஜித் கேள்வி
Local
09 August 2026
"எங்க அப்பா ரொம்ப சப்போர்ட்" – தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி
Local
09 August 2026
ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை
Local
09 August 2026
உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!
Local
09 August 2026
நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு
Local
09 August 2026
நாளை ஆரம்பமாகும் உயர் தரப் பரீட்சை: பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்!
Local
09 August 2026
இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
Local
09 August 2026