தனது தோல்விகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மகா சங்கத்தினரை அடக்கி ஒடுக்கும் வகையில் அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் கூறினார்.
வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும், மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுகின்றது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது.
நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல், புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் கூறினார்.
வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும், மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுகின்றது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது.
நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல், புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Latest News
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆகஸ்ட் 18 இல் சமர்ப்பிப்பு!
Local
10 August 2026
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுடன் அரசாங்கக் குழு சந்திப்பு
Local
10 August 2026
எனது அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
Local
10 August 2026
கேகாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் நிர்வாகத்திற்கு 520,000 ரூபாய் அபாரதம்
Local
10 August 2026
அதிக விலைக்கு உந்துருளிகளை விற்ற 3 வியாபாரத்தளங்களுக்கு அபராதம்
Local
10 August 2026
இலங்கையர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 7 மாதங்களில் 5 பில்லியன் டொலரைக் கடந்தது
Local
10 August 2026
சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு
Local
10 August 2026
மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!
Local
10 August 2026
டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!
Local
10 August 2026
"தமிழகத்தில் விஜய் ஊழலற்ற ஆட்சியைத் தருகிறார்; அவரே அடுத்த பிரதமர்!"
Local
09 August 2026