General09 August 2026

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 2,723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெற்றது.

இந்த முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றுவதற்குத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes