இஸ்ரேலின் உணவகம் (Restaurant) மற்றும் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பதிவுகள் ஸ்ரீலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் (www.slbfe.lk) நாளை (10) திறக்கப்படவுள்ளன.
அதன்படி, உணவகத் துறைக்கான பதிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மொத்தம் 4,000 பேர் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்கு 25 முதல் 40 வயதுடைய ஆண்கள் விண்ணப்பிக்க முடியும். சமையலறையில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம், 8 ஆண்டுகள் பாடசாலைக் கல்வி, நல்ல ஆங்கில அறிவு மற்றும் பாரம் தூக்குதல், நின்று வேலை செய்தல் போன்றவற்றுக்கான உடல் ஆரோக்கியம் என்பன அவசியமாகும்.
மேலும், விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ (பெற்றோர், மனைவி, பிள்ளைகள்) இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரிந்திருக்கக் கூடாது.
அதேவேளை, புனரமைப்புத் துறைக்கான பதிவுப் பக்கம் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு திறக்கப்படவுள்ளது. ஜிப்சம் வேலைகள், மின்சாரப் பெட்டிகள் பொருத்துதல் மற்றும் கல் சுவர் கட்டுதல், நிறப்பூச்சு வேலைகள், டைல்ஸ் ஒட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 12,000 தொழிலாளர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர்.
25 முதல் 45 வயதுடைய, 10 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியும் அடிப்படை ஆங்கில அறிவும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்னர் புனரமைப்புத் துறைக்கான தேர்வில் தோற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற போதிலும், பிற துறைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் திறமைகளை இஸ்ரேலியப் பிரதிநிதிகளே நேரடியாகப் பரிசோதிப்பார்கள் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு உண்மையிலேயே அனுபவமும் தகுதியும் உள்ள துறைக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, உணவகத் துறைக்கான பதிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மொத்தம் 4,000 பேர் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்கு 25 முதல் 40 வயதுடைய ஆண்கள் விண்ணப்பிக்க முடியும். சமையலறையில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம், 8 ஆண்டுகள் பாடசாலைக் கல்வி, நல்ல ஆங்கில அறிவு மற்றும் பாரம் தூக்குதல், நின்று வேலை செய்தல் போன்றவற்றுக்கான உடல் ஆரோக்கியம் என்பன அவசியமாகும்.
மேலும், விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ (பெற்றோர், மனைவி, பிள்ளைகள்) இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரிந்திருக்கக் கூடாது.
அதேவேளை, புனரமைப்புத் துறைக்கான பதிவுப் பக்கம் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு திறக்கப்படவுள்ளது. ஜிப்சம் வேலைகள், மின்சாரப் பெட்டிகள் பொருத்துதல் மற்றும் கல் சுவர் கட்டுதல், நிறப்பூச்சு வேலைகள், டைல்ஸ் ஒட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 12,000 தொழிலாளர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர்.
25 முதல் 45 வயதுடைய, 10 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியும் அடிப்படை ஆங்கில அறிவும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்னர் புனரமைப்புத் துறைக்கான தேர்வில் தோற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற போதிலும், பிற துறைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் திறமைகளை இஸ்ரேலியப் பிரதிநிதிகளே நேரடியாகப் பரிசோதிப்பார்கள் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு உண்மையிலேயே அனுபவமும் தகுதியும் உள்ள துறைக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
துரந்தர் திரைப்படத்தின் வெற்றி: நடிகை சாரா அர்ஜுனுக்கு அதிகரிக்கும் பட வாய்ப்புகள்!
Local
12 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் - ஜனாதிபதி
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாய் உயிரிழப்பு
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு - பெக்கோ சமனின் தாய்க்கு காயம்
Local
12 August 2026
குஜராத் அணிக்குத் திரும்ப ஹர்திக் பாண்டியா விதித்த நிபந்தனை – சுப்மன் கில்லிடம் ஆலோசனை கேட்ட நிர்வாகம்
Local
12 August 2026
7 மாவட்டங்களுக்கு வெப்பச் சுட்டெண் அதிகரிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
12 August 2026
யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: வேட்டைக்காரர் ஒருவருக்கு காயம்
Local
12 August 2026
கிரிக்கெட்டில் புதிய பயணத்தைத் தொடங்கும் ரஹானே!
Local
12 August 2026
‘தர்மன்’ திரைப்படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தீவிரம்
Local
12 August 2026
அருண்ராஜா காமராஜ் படத்தைக் கைவிட்ட விஷ்ணு விஷால் – கருத்து வேறுபாட்டால் முறிந்த கூட்டணி
Local
12 August 2026