General10 August 2026

கடந்த 9 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 9 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 89,639 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்,

மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த நோயாளர்களில் அதிகபட்சமாக, 21.27 சதவீதத்தினர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

அவர்களின் எண்ணிக்கை 19,067 என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes