General10 August 2026

கிழக்கு மாகாணத்தில் சிறுபோக நெல் அறுவடை நிறைவு

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை தற்போது நிறைவடைந்துள்ளது.

அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்து சுமார் ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், சில பகுதிகளில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான முறையான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, நெல் அறுவடை நிறைவடையும் நிலையில், தமது அறுவடையை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் தற்போது காணப்படும் நெல் உபரியை கருத்திற்கொண்டு, நெல் கொள்வனவு நடவடிக்கை முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பயனுள்ள வகையில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அண்மையில் விவசாய அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு, தரநிலைப்படுத்தப்பட்ட நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நெல் ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes