மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள குற்றக்குழு உறுப்பினர்கள் தொடர்பில் காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இரத்மலானை சைமா உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் நேற்று மாலை வானூர்தி ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 41 வயதுடைய பிரதான சந்தேகநபர், மலேசியக் காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
2014ஆம் ஆண்டு பேராதனை பகுதியில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி ஒருவரை கடத்தி தாக்கியமை மற்றும் 2016ஆம் ஆண்டு அதே பகுதியில் மற்றுமொருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பான இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், சந்தேகநபருக்கு எதிராகப் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2003ஆம் ஆண்டு கல்கிஸ்சை பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 2007ஆம் ஆண்டு கைக்குண்டொன்றை வைத்திருந்தமை தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, பிரதான சந்தேகநபரான இரத்மலானை சைமாவுடன் மலேசியாவிலிருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 35 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஒருவரும், 31 வயதுடைய கல்கிஸ்சையை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
"விஸ்வநாத் & சன்ஸ்" மீண்டும் பார்க்கத் தூண்டும் திரைப்படம்: நடிகர் கார்த்தி புகழாரம்!
Local
14 August 2026
அந்த உணர்வு வந்தால் அந்த இடத்திலேயே நிற்க மாட்டேன் – திறந்த மனதுடன் பதிலளித்த அனிருத்!
Local
14 August 2026
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்
Local
14 August 2026
நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஆகஸ்ட் 18ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
Local
14 August 2026
இந்திய உந்துருளிகளில் அதிக வேகத்தில் செல்லும் இளைஞர்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை
Local
14 August 2026
நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் தாயும் அவரது காதலனும் கைது
Local
14 August 2026
கீரியும்,பாம்புமாக செயற்படும் விஜய்யும் உதயநிதியும் -விவாதமாகும் மோதல் போக்கு
Local
14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
14 August 2026
இலங்கைக்கான GSP வரிச் சலுகைக்கு ஐரோப்பிய ஒன்றியம் புதிய நிபந்தனைகள்
Local
14 August 2026
31 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணையும் பிரபு மற்றும் சுகன்யா
Local
14 August 2026