நிலவில் மனிதர்களைத் தரையிறக்கி, அங்கு நிரந்தர குடியிருப்பு அமைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மூன் பேஸ்’ (Moon Base) திட்டத்தில் இணையுமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு (ISRO) அமெரிக்காவின் நாசா (NASA) அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இந்தியா - அமெரிக்க சிவில் ஸ்பேஸ் கூட்டுக் பணிக்குழுவின் 9 ஆவது கூட்டத்தில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆர்டெமிஸ் ஒப்பந்தங்களின்' (Artemis Accords) கீழ் அறிவியல் தரவுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் மேலும் முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட கூட்டுத் திட்டமான 'நிசார்' (NISAR) செயற்கைக்கோள் வெற்றி மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டமை போன்ற திட்டங்களைத் தொடர்ந்து, இரு நாடுகளின் விண்வெளி உறவு மேலும் வலுவடைந்துள்ளது.
அமெரிக்கா தனது 'ஆர்டெமிஸ்' திட்டத்தின் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதனைத் தரையிறக்க இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இந்தியா - அமெரிக்க சிவில் ஸ்பேஸ் கூட்டுக் பணிக்குழுவின் 9 ஆவது கூட்டத்தில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆர்டெமிஸ் ஒப்பந்தங்களின்' (Artemis Accords) கீழ் அறிவியல் தரவுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் மேலும் முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட கூட்டுத் திட்டமான 'நிசார்' (NISAR) செயற்கைக்கோள் வெற்றி மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டமை போன்ற திட்டங்களைத் தொடர்ந்து, இரு நாடுகளின் விண்வெளி உறவு மேலும் வலுவடைந்துள்ளது.
அமெரிக்கா தனது 'ஆர்டெமிஸ்' திட்டத்தின் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதனைத் தரையிறக்க இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஷஷி வீரவன்சவுக்கு முன்பிணை – வழக்கு செப்டம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
20 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தும் அரசின் நகர்வு – நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டு
Local
20 August 2026
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்க கோரிக்கை!
Local
20 August 2026
சாணக்கியனின் கேள்விக்கு ஒரு வாரத்தில் தீர்வு - சுகாதார அமைச்சர் உறுதி!
Local
20 August 2026
அரச ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம் – சாணக்கியன் இராசமாணிக்கம்
Local
20 August 2026
சிறுவர் பாதுகாப்பு ,கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்புகள்!
Local
20 August 2026
ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம்... எதிர்க்கட்சிக்கு இன்னொரு நியாயமா? சஜித் அதிருப்தி
Local
20 August 2026
தமன்னா ஏற்படுத்திய தாக்கத்தை தக்கவைப்பாரா பூர்ணா?
Local
20 August 2026
சிறுவர் வேலைவாய்ப்புத் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு: தண்டனைகளும் அபராதங்களும் உயர்வு
Local
20 August 2026
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் போலியானது – அமைச்சர் ஆனந்த விஜேபால
Local
20 August 2026