General13 August 2026

செயற்கை உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து - தீவிரமடையும் குடல் நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை

இளைஞர்கள் மத்தியில் குடல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர் மருத்துவர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.

செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வது, மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை இதற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவை குடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இதன் காரணமாக எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட இயற்கை உணவுகளை அதிகளவில் உட்கொள்வதுடன், செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாட்டைக் குறைக்குமாறும் அவர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes