General15 August 2026

மலையகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க ஆன்மீக விழிப்புணர்வு!" – சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடித் திட்டம்.

மலையகப் பகுதிகளில் கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்தவும், போதையற்ற சமூகத்தை உருவாக்கவும் பிரத்யேக விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலைக் காவல்துறை மூலம் சட்டரீதியாகத் தடுத்தாலும், பயன்பாட்டைக் குறைக்க மக்களிடையே மனமாற்றம் அவசியம். இதற்காக மதகுருமார்கள், பாடசாலைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இந்தநிலையில் மலையகத்தில் உள்ள அறநெறிப் பாடசாலைகளை வலுப்படுத்தி, சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குப் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதக் கசிப்பு உற்பத்தியை முற்றாக ஒழிப்பது தொடர்பாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், காவல்துறை மாஅதிபர் மற்றும் இரத்தினபுரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் உயர்மட்டக் கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.

எனவே தொடர்ச்சியான சிறப்புத் திட்டங்களின் மூலம் மலையகத்தைப் போதையற்ற பிரதேசமாக மாற்றி, மகிழ்ச்சியான குடும்ப அமைப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes