General16 August 2026

இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் அஞ்சலி!

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (IPKF) நினைவிடத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (15) மலரஞ்சலி செலுத்தினார்.

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை - புதிய நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள இந்த நினைவிடத்துக்கு விஜயம் செய்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், இலங்கையின் அமைதி மற்றும் ஒற்றுமைக்காகத் போரிட்டு உயிரிழந்த இந்திய சிப்பாய்களுக்கு சுடர் ஏற்றி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ImageImageImage
Related recommendation
Hiru TV News | Programmes