நீதிமன்ற நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும், மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்டு வரும் தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எந்தவித விரக்தி நிலையும் இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
"மக்கள் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நல்ல முடிவுக்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுவது இயல்பானதாகும்.
பழமைவாத எண்ணங்கள், தமக்கு ஏற்படும் தற்காலிக இழப்புகள், அரசியல் இலாப நோக்கங்கள் அல்லது சரியான புரிதலின்மை போன்ற பல்வேறு காரணங்களால் சிலர் இவ்வாறான முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும்.
ஆறு ஒன்றின் குறுக்கே புதிய பாலமொன்று கட்டப்படும் போது, அதுவரை அங்கு படகு ஓட்டி பிழைப்பு நடத்தியவருக்கு தற்காலிக பாதிப்பு ஏற்படுவது போன்ற சூழலே சமூக மாற்றங்களின் போது நிலவுகிறது” என அமைச்சர் உவமித்துக் கூறினார்.
எழும் எதிர்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் கலந்தாலோசித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றுக்கான சரியான தீர்வுகளையோ அல்லது மாற்று வழிகளையோ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அல்லது விமர்சனங்களைப் பொருட்படுத்தாது, ஜனாதிபதி மக்கள் நலனுக்காகவே உறுதியான தீர்மானங்களை எடுத்து வருகிறார்.
தேங்கிக்கிடக்கும் வழக்குகளில் இருந்து மக்களை விடுவித்து நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதும், நீதித்துறை மீதான நம்பிக்கையை அதிகரிப்பதுமே இதன் முதன்மை நோக்கமாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
ஊடகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
"மக்கள் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நல்ல முடிவுக்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுவது இயல்பானதாகும்.
பழமைவாத எண்ணங்கள், தமக்கு ஏற்படும் தற்காலிக இழப்புகள், அரசியல் இலாப நோக்கங்கள் அல்லது சரியான புரிதலின்மை போன்ற பல்வேறு காரணங்களால் சிலர் இவ்வாறான முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும்.
ஆறு ஒன்றின் குறுக்கே புதிய பாலமொன்று கட்டப்படும் போது, அதுவரை அங்கு படகு ஓட்டி பிழைப்பு நடத்தியவருக்கு தற்காலிக பாதிப்பு ஏற்படுவது போன்ற சூழலே சமூக மாற்றங்களின் போது நிலவுகிறது” என அமைச்சர் உவமித்துக் கூறினார்.
எழும் எதிர்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் கலந்தாலோசித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றுக்கான சரியான தீர்வுகளையோ அல்லது மாற்று வழிகளையோ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அல்லது விமர்சனங்களைப் பொருட்படுத்தாது, ஜனாதிபதி மக்கள் நலனுக்காகவே உறுதியான தீர்மானங்களை எடுத்து வருகிறார்.
தேங்கிக்கிடக்கும் வழக்குகளில் இருந்து மக்களை விடுவித்து நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதும், நீதித்துறை மீதான நம்பிக்கையை அதிகரிப்பதுமே இதன் முதன்மை நோக்கமாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
Latest News
சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு? : சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா!
Local
16 August 2026
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் : காவல்துறை வெளியிட்ட அவசர அறிவிப்பு!
Local
16 August 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்த ஸ்பெயின் கிரிக்கெட் அணி !
Local
16 August 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வெளியே செல்வோரின் கவனத்திற்கு!
Local
16 August 2026
சாதனையாளன் விஜய்யை விட, சுதந்திர தின நிகழ்வில் பேசு பொருளாகிய நடிகை த்ரிஷா!
Local
16 August 2026
6 ஆண்டுகளில் 709 கைதிகள் தப்பி ஓட்டம் : பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - தீவிரமாகும் கண்காணிப்பு நடவடிக்கைகள்!
Local
16 August 2026
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
Local
16 August 2026
கொரியப் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!
Local
16 August 2026