பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் இந்தியாவுக்குச் செல்வதை விட, பாகிஸ்தானிலேயே தொடர்ந்து வசிப்பதற்கு விரும்புவதாக அந்த நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய அவர் "இந்தியர்கள் 'அகண்ட பாரதம்' என்ற எண்ணத்தை நம்புகிறார்கள். ஆனால் நாங்கள் சகிப்புத்தன்மை கொண்ட மனப்பான்மையைக் கொண்டவர்கள். பாகிஸ்தானில் 4 சதவீதம் இந்துக்கள் வாழ்கின்றனர்.
உலகளாவிய ரீதியில் மற்ற இடங்களில் இருப்பதைப் போலவே அவர்களும் இங்குச் சுதந்திரமாகவே வாழ்கின்றனர். இதனால் அவர்கள் இந்தியாவுக்குச் செல்வதை விடவும் பாகிஸ்தானிலேயே வாழ விரும்புவார்கள்.
பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு, தங்களது மதத்தைப் பின்பற்றுவதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே பல்வேறு கண்ணோட்ட வேறுபாடுகள் உள்ளன.
நாங்கள் போரை விரும்பவில்லை; அமைதியையே விரும்புகிறோம். ஆனால் அமைதிக்கான எங்களது விருப்பத்தைப் பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீர் வளங்கள் மீதான உரிமைகள் உட்படத் தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைப்பட்சமாக இடைநிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்களது சிவப்புக் கோடு என்பதைத் தெளிவாக அறிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
அத்துடன், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்கு ஒரு பொறுப்பான நாடாகவும், ஸ்திரத்தன்மையை உருவாக்கும் சக்தியாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து செயற்படும் என்றும் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய அவர் "இந்தியர்கள் 'அகண்ட பாரதம்' என்ற எண்ணத்தை நம்புகிறார்கள். ஆனால் நாங்கள் சகிப்புத்தன்மை கொண்ட மனப்பான்மையைக் கொண்டவர்கள். பாகிஸ்தானில் 4 சதவீதம் இந்துக்கள் வாழ்கின்றனர்.
உலகளாவிய ரீதியில் மற்ற இடங்களில் இருப்பதைப் போலவே அவர்களும் இங்குச் சுதந்திரமாகவே வாழ்கின்றனர். இதனால் அவர்கள் இந்தியாவுக்குச் செல்வதை விடவும் பாகிஸ்தானிலேயே வாழ விரும்புவார்கள்.
பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு, தங்களது மதத்தைப் பின்பற்றுவதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே பல்வேறு கண்ணோட்ட வேறுபாடுகள் உள்ளன.
நாங்கள் போரை விரும்பவில்லை; அமைதியையே விரும்புகிறோம். ஆனால் அமைதிக்கான எங்களது விருப்பத்தைப் பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீர் வளங்கள் மீதான உரிமைகள் உட்படத் தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைப்பட்சமாக இடைநிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்களது சிவப்புக் கோடு என்பதைத் தெளிவாக அறிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
அத்துடன், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்கு ஒரு பொறுப்பான நாடாகவும், ஸ்திரத்தன்மையை உருவாக்கும் சக்தியாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து செயற்படும் என்றும் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
கொழும்பு துறைமுகத்தின் பாரிய வளர்ச்சி
Local
29 August 2026
ஒன்றாக சாப்பிடுங்கள்-மனச்சோர்வை விரட்டுங்கள்- ஆய்வுகளில் வெளியான முக்கிய தகவல்
Local
29 August 2026
நேபாளத்தில் காணாமல் போனோரின் எண்ணிக்கை 2ஆயிரத்தை நெருங்குகிறது
Local
29 August 2026
நியூயோர்க்கில் ஆர்எஸ்எஸின் தலைவர் தலைவர் மோகன் பகவத் நடத்தும் நிகழ்வு- எதிர்ப்பும் ஆதரவும்
Local
29 August 2026
அமெரிக்காவில் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் ஆரம்பம்
Local
29 August 2026
அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்- கனடாவே அதிகம் பாதிக்கப்படும்
Local
29 August 2026
காஸாவில் அமைதியை வழிகாட்டலை மீறினால், போர்நிறுத்தம் முற்றிலுமாகச் சிதைந்துவிடும் என்று எச்சரிக்கை
Local
29 August 2026
ட்ரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
Local
29 August 2026
ரஷ்யா மீது நாளொன்றுக்கு 1000 ஆளில்லா வானுார்தி தாக்குதல்கள்-ஸெலென்ஸ்கி இராணுவத்திற்கு உத்தரவு
Local
29 August 2026
மேற்கு கரையில் சட்டவிரோத குடியேற்றங்களுடன் தொடர்புடைய பிரித்தானிய நிறுவனங்கள்- பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்
Local
29 August 2026