General16 August 2026

நுவரெலியா மாவட்ட நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க கணக்காய்வு குழு: ஜனாதிபதி நடவடிக்கை!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக கணக்காய்வு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த கணக்காய்வு நடவடிக்கையானது நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்களிலும், 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற செயற்பாடுகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் 'அஸ்வெசும' பயனாளிகள் தொடர்பான நிதி மோசடிகள் குறித்து விசேட விசாரணை நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சமுர்த்தி மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு, அரசாங்கம் வழங்கிய ஏனைய நிவாரணங்கள் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் ஆகியவை உரிய பயனாளிகளுக்குச் சரியாகச் சென்றடைந்தனவா என்பதும் இந்த விசாரணையின் மூலம் கண்டறியப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes