தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவதூறாகப் பேசியதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செங்கோட்டையன் கருத்துத் தெரிவிக்கையில், நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகச் சரிவைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் ஒரு அரசியல் தலைவரைப் போல் பேசாமல், தெருமுனைப் பேச்சாளரைப் போல் பேசியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் சாடியுள்ளார்.
பாஜகவினர் பெண்களுக்கெதிரான வெறுப்பையும் அவதூறையுமே அரசியலாகச் செய்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வன்னியரசு, நயினார் நாகேந்திரன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயாரை நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியுள்ளதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் வெளியிட்டுள்ளார். அதேநேரம், பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது என 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொள்கைகளை விமர்சிக்கலாம், ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம்; ஆனால் குடும்பத்தை அரசியல் விமர்சனத்திற்குள் இழுப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல எனத் தவெக செய்தி தொடர்பாளர் மு. சவுந்தர ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சொந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவரான குஷ்புவும் இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல்வரின் தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து அருவருப்பானது என்றும், ஒரு தாயால் தான் இந்த உலகத்திற்கு வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் எனக் குறிப்பிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்குத் தமது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அமைச்சர் செங்கோட்டையன் கருத்துத் தெரிவிக்கையில், நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகச் சரிவைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் ஒரு அரசியல் தலைவரைப் போல் பேசாமல், தெருமுனைப் பேச்சாளரைப் போல் பேசியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் சாடியுள்ளார்.
பாஜகவினர் பெண்களுக்கெதிரான வெறுப்பையும் அவதூறையுமே அரசியலாகச் செய்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வன்னியரசு, நயினார் நாகேந்திரன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயாரை நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியுள்ளதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் வெளியிட்டுள்ளார். அதேநேரம், பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது என 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொள்கைகளை விமர்சிக்கலாம், ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம்; ஆனால் குடும்பத்தை அரசியல் விமர்சனத்திற்குள் இழுப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல எனத் தவெக செய்தி தொடர்பாளர் மு. சவுந்தர ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சொந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவரான குஷ்புவும் இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல்வரின் தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து அருவருப்பானது என்றும், ஒரு தாயால் தான் இந்த உலகத்திற்கு வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் எனக் குறிப்பிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்குத் தமது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
Latest News
கஞ்சாவை பறிமுதல் செய்து உலர்த்தக் கொடுத்த காவல்துறை: நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிரடி கைது நடவடிக்கை!
Local
17 August 2026
"உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்": சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!
Local
17 August 2026
மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துமாறு ஷாருக் கான் உள்ளிட்ட பொலிவூட் பிரபலங்களுக்கு மஹாராஷ்டிர அரசு எச்சரிக்கை!
Local
17 August 2026
சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் இருக்கும் நடிகை த்ரிஷா?
Local
17 August 2026
'டிட்வா' சூறாவளி நிவாரண நிதியில் 70% செலவிடப்படாமல் உள்ளது!
Local
17 August 2026
ஒரு பில்லியன் டொலர் பணமோசடி செய்த நிறுவனம்: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!
Local
17 August 2026
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
17 August 2026
அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
17 August 2026
பட்டம் விடும் போது சிறுவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!
Local
17 August 2026
மகன் ஆத்விக்கின் கால்பந்து வெற்றியை நிழற்படங்களுடன் கொண்டாடிய ஷாலினி
Local
17 August 2026