தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவதூறாகப் பேசியதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செங்கோட்டையன் கருத்துத் தெரிவிக்கையில், நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகச் சரிவைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் ஒரு அரசியல் தலைவரைப் போல் பேசாமல், தெருமுனைப் பேச்சாளரைப் போல் பேசியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் சாடியுள்ளார்.
பாஜகவினர் பெண்களுக்கெதிரான வெறுப்பையும் அவதூறையுமே அரசியலாகச் செய்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வன்னியரசு, நயினார் நாகேந்திரன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயாரை நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியுள்ளதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் வெளியிட்டுள்ளார். அதேநேரம், பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது என 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொள்கைகளை விமர்சிக்கலாம், ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம்; ஆனால் குடும்பத்தை அரசியல் விமர்சனத்திற்குள் இழுப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல எனத் தவெக செய்தி தொடர்பாளர் மு. சவுந்தர ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சொந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவரான குஷ்புவும் இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல்வரின் தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து அருவருப்பானது என்றும், ஒரு தாயால் தான் இந்த உலகத்திற்கு வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் எனக் குறிப்பிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்குத் தமது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அமைச்சர் செங்கோட்டையன் கருத்துத் தெரிவிக்கையில், நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகச் சரிவைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் ஒரு அரசியல் தலைவரைப் போல் பேசாமல், தெருமுனைப் பேச்சாளரைப் போல் பேசியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் சாடியுள்ளார்.
பாஜகவினர் பெண்களுக்கெதிரான வெறுப்பையும் அவதூறையுமே அரசியலாகச் செய்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வன்னியரசு, நயினார் நாகேந்திரன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயாரை நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியுள்ளதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் வெளியிட்டுள்ளார். அதேநேரம், பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது என 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொள்கைகளை விமர்சிக்கலாம், ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம்; ஆனால் குடும்பத்தை அரசியல் விமர்சனத்திற்குள் இழுப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல எனத் தவெக செய்தி தொடர்பாளர் மு. சவுந்தர ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சொந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவரான குஷ்புவும் இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல்வரின் தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து அருவருப்பானது என்றும், ஒரு தாயால் தான் இந்த உலகத்திற்கு வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் எனக் குறிப்பிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்குத் தமது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
Latest News
நீர்கொழும்பிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை
Local
18 August 2026
சிறுபோக பருவ நெல் கொள்முதல்: சிறு, நடுத்தர நெல் ஆலைகள் நிதியுதவி பெற மாவட்ட செயலகத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
Local
18 August 2026
நில்திய தடாகப் பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!
Local
18 August 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை ஒப்புதல்!
Local
18 August 2026
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ. 80.8 மில்லியன் நஷ்டஈடு!
Local
18 August 2026
கிளிநொச்சியில் புலிகளின் பயிற்சி முகாம் இயங்குகிறதா? உண்மை என்ன? அரசாங்கம் தெளிவுபடுத்தல்!
Local
18 August 2026
இலங்கை வெற்றிபெற இன்னும் 288 ஓட்டங்கள் தேவை!
Local
18 August 2026
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை!
Local
18 August 2026
சீனப் பொருளாதாரம் முதல் 7 மாதங்களில் ஸ்திரமான வளர்ச்சி: புள்ளியியல் துறை அறிவிப்பு
Local
18 August 2026
'கல்விப் பேரவை' நிறுவும் புதிய சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி!
Local
18 August 2026