நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த சட்டமூலம் இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் நீதித்துறை தொடர்பான ஏற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்வதுடன், நீதித்துறை அமைப்பு சட்டத்திலும் திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய அரசியலமைப்பின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் உள்ளது.
எனினும், அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய சட்டமூலத்தின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் நாள் அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நாள் ஆகிய இரண்டில் முதலில் வரும் நாளில் ஓய்வுபெற வேண்டும் என்ற ஏற்பாடும் சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் பிரதான நோக்கம் நீதிமன்றங்களில் நீண்டகாலமாக தேங்கியுள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதும், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Latest News
செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு
Local
19 August 2026
செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் - விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்!
Local
19 August 2026
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிரக்ஞானந்தா!
Local
19 August 2026
அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வடையும் அபாயம்!
Local
19 August 2026
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: பாபர் அசாம் இன்றி களமிறங்கிய பாகிஸ்தான்!
Local
19 August 2026
கிளிநொச்சியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலியான தகவல்களைப் பரப்பியவருக்கு விளக்கமறியல்
Local
19 August 2026
சிறைச்சாலைகளில் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய ஒருங்கிணைந்த பொறிமுறை – நீதியமைச்சர்
Local
19 August 2026
தெஹிவலை மிருகக்காட்சிசாலையின் 30 வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு
Local
19 August 2026
போக்குவரத்து அபராதங்களை செப்டம்பர் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திரமே செலுத்த முடியும்!
Local
19 August 2026
கண்டியில் மதுபானக் கடைகள் 10 நாட்களுக்கு மூடல்
Local
19 August 2026