General18 August 2026

22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் மனுத் தாக்கல்!

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி இன்று (18) உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனு SC/SD/31/2026 என்ற இலக்கத்தின் கீழ் இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அதன் அரசியலமைப்புத் தன்மை மற்றும் அதில் காணப்படுகின்ற சிக்கல்கள் குறித்து நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes