இலங்கைக்கும் போலந்துக்கும் இடையே கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இரு நாடுகளிலும் தண்டனை பெற்ற குடிமக்கள், தமது எஞ்சிய தண்டனைக் காலத்தைச் சொந்த நாட்டில் அனுபவிக்கவும், அவர்களின் சமூக மறுவாழ்வு மற்றும் மீள் இணைப்புக்கு ஆதரவளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்ஹர்ஷன நாணயக்காரவினால் இதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நியைில் 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றவாளிகள் இடமாற்றச் சட்டத்தின் கீழ், இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர் தமது சொந்த நாடுகளுக்குச் சென்று தண்டனையை அனுபவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, வெளிநாடுகளில் தண்டனை பெற்ற இலங்கைக் குடிமக்களும் எஞ்சிய தண்டனைக் காலத்தை இலங்கையில் அனுபவிப்பதற்கு இந்தச் சட்டம் இடமளிக்கிறது.
போலந்துடன் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான கைதிகள் இடமாற்றங்களை முறைசார்ந்த சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்
Local
19 August 2026
காலி டெஸ்டில் மனோதத்துவ ஆட்டம்: ஜெய்ஸ்வாலின் தூண்டிலில் சிக்கி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த திக்வெல்ல!
Local
19 August 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிதல் கட்டாயம் - செப்டம்பர் 19ஆம் திகதியுடன் சலுகைக்காலம் நிறைவு
Local
19 August 2026
இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது இலங்கை!
Local
19 August 2026
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழப்பு
Local
19 August 2026
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
19 August 2026
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு
Local
19 August 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று
Local
19 August 2026
"AI அம்மா!" - AI குழந்தை, AI காதலனுடன் வாழ்வதாகக் கூறி அதிர்ச்சி அளித்த பெண்
Local
19 August 2026
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்
Local
19 August 2026