General19 August 2026

அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கை – சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய வழிகாட்டல்

நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளி நேரடியாக உடலில் படுவதால் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் என்றும், கடுமையான பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உயிரிழப்புகள் கூட ஏற்படக்கூடும் என்றும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

சிறுவர்கள், முதியவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளியில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், குறிப்பாக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஒளியில் அதிக நேரம் நடமாடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், போதுமான அளவு நீர் அருந்துமாறும், இளநிற ஆடைகளை அணியுமாறும் சுகாதார அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes