International21 August 2026

தொலைக்காட்சி விவாதத்திலும் மோதிக்கொண்ட விஜய் - உதய் கட்சியினர்!

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நாஞ்சில் சம்பத் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையில் உள்ள முகப்பேரில் பிரபல தனியார் ஊடகம் சார்பில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார்.

இந்த விவாத நிகழ்ச்சியின்போது, அவர் திராவிட முன்னேற்றக்கழகத்தினரை கடுமையாக விமர்சித்து பேசியதுடன்,சில கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திராவிட முன்னேற்றக்கழகத்தினருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், கூட்டத்திலிருந்த ஒருவர் நாஞ்சில் சம்பத்தை நோக்கி நாற்காலியை வீசியுள்ளார். அது அவர் மீது பட்டதால் அங்கு திடீர் பரபரப்பும் மோதல் சூழலும் உருவாகியது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விவாத நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பாதுகாப்புக்குப் பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் ராஜீவ் காந்தி போன்றோர் தொண்டர்களைச் சமாதானப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes