சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில்,
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு 3,168 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் (2025) இதே காலகட்டத்தில் 1,995 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
இதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி மற்றும் விலை ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இந்த ஆண்டு மே மாதத்தில் மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வட்டி வீதம் 100 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தப்பட்டு 8.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் விசேட எரிபொருள் வகைகளை இறக்குமதி செய்யத் தனித்தனி கேள்விப்பத்திர நடைமுறைகள் பின்பற்றப்படுவதுடன், விலை மதிப்பீடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏற்றுமதித் துறையில் உணவு, உரம் மற்றும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சர்வதேச சந்தையில் கடுமையான விலைப் போட்டியையும் அதிகரித்துள்ள போக்குவரத்துச் செலவுகளையும் எதிர்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில்,
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு 3,168 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் (2025) இதே காலகட்டத்தில் 1,995 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
இதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி மற்றும் விலை ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இந்த ஆண்டு மே மாதத்தில் மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வட்டி வீதம் 100 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தப்பட்டு 8.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் விசேட எரிபொருள் வகைகளை இறக்குமதி செய்யத் தனித்தனி கேள்விப்பத்திர நடைமுறைகள் பின்பற்றப்படுவதுடன், விலை மதிப்பீடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏற்றுமதித் துறையில் உணவு, உரம் மற்றும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சர்வதேச சந்தையில் கடுமையான விலைப் போட்டியையும் அதிகரித்துள்ள போக்குவரத்துச் செலவுகளையும் எதிர்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Latest News
வெளிநாட்டு பணியாளர்களுக்கான H-1B விசா கட்டணத்தை உயர்த்த அமெரிக்கா நடவடிக்கை
Local
25 August 2026
துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’: பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்
Local
25 August 2026
உறவினர் வீட்டில் நடந்த பெரும் சோகம் : 3 வயது சிறுமியின் உயிரைப் பறித்த இரசாயன திரவம்!
Local
25 August 2026
ரூ.3878 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துகளை அரசுடைமையாக்க நடவடிக்கை!
Local
25 August 2026
விஜய்யின் அம்மா ஷோபாவிற்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு
Local
25 August 2026
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இலங்கையில் சட்டென குறைந்த தங்க விலை!
Local
25 August 2026
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது
Local
25 August 2026
கேரளாவில் 100 மீட்டர் தொலைவில் சிறுத்தை – விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் ஆபத்தான பயணம்!
Local
25 August 2026
அதிவேகப் பேருந்து நடத்துநர் உட்பட 9 பேர் போதைப்பொருளுடன் சிக்கினர்: மாகும்பரவில் அதிரடி சோதனை!
Local
25 August 2026
எம்.எஸ்.தோனி, மார்க் பவுச்சரின் சாதனைகளை முறியடித்தார் ரிஷப் பண்ட் !
Local
25 August 2026