ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில், வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியர் தாக்கியதில் ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை காலை மிகுந்த உற்சாகத்துடன் பாடசாலைக்குச் சென்ற சிறுவன், மதிய வேளையில் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை கூறுகையில், "பாடசாலை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, ஆசிரியர் தடியால் மிரட்டித் தாக்கியது பதிவாகியுள்ளது. அந்த அதிர்ச்சியிலும் பயத்திலும் அவன் சரிந்து விழுந்துள்ளான்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த ஆசிரியர் இதுபோன்று ஏனைய மாணவர்களையும் அடித்துத் துன்புறுத்துவதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் உடலம் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள ஆந்திரப் பிரதேச கல்வித்துறை, இது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க, பிராந்திய இணை இயக்குநர் (RJD), மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மற்றும் வருவாய் கோட்ட அதிகாரி (RDO) ஆகியோரைக் கொண்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Latest News
டோக்கியோவில் குலுங்கிய உயரமான கட்டிடங்கள்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!
Local
23 August 2026
BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! 'நமஸ்தே இந்தியா' என வைரலாகும் விளம்பர காணொளி!
Local
23 August 2026
தொடருந்து நிலைய அதிகாரியான பூனை! மும்பை மெட்ரோவின் வைரல் 'தலைமைப் பூனை அதிகாரி'!
Local
23 August 2026
"நயன்தாரா படம் பார்க்க அடித்துப் பிடித்து நுழைவுச்சீட்டு வாங்கிய கவின்: வைரலாகும் சுவாரஸ்ய தகவல்!"
Local
23 August 2026
வாடகை வீடு தேடச் சென்று AI நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெற்ற இளம்பெண்: சுவாரஸ்ய சம்பவம்!"
Local
23 August 2026
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் மீன் வளர்ப்பு திட்டம்: மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும் வாய்ப்பு
Local
23 August 2026
தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கம்பஹா பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
Local
23 August 2026
வங்காள விரிகுடாவில் 24 பணியாளர்களுடன் மூழ்கியது பனாமா சரக்குக் கப்பல்: இந்தியப் படைகள் தீவிர மீட்பு நடவடிக்கை!
Local
22 August 2026
இலங்கையின் தில்ஹானி மற்றும் ஷானிகா பதக்கங்களை வென்று சாதனை!
Local
22 August 2026
வடக்கு – கிழக்கில் இணைந்த சுயாட்சி தீர்வு அவசியம்: ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்!
Local
22 August 2026