International22 August 2026

உலக கிண்ணத்தில் இடம்பெற்ற அத்துமீறல்கள்: ஆர்ஜன்டீனாவுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அபராதம்

ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் வீரர்களைத் தாக்கியதற்காக அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதில், லியாண்ட்ரோ பரேடெஸ் (Leandro Paredes) மீது, ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதாகவும், மற்றுமொரு வீரர் காவியை கீழே தள்ளியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்காக அவருக்கு, 10 போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 90,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய வீரர்களான ந{ஹவல் மொலினாவுக்கு 7 போட்டிகள் தடையுடன் 90,000 டொலர்கள் அபராதமும், தியாகோ அமாடாவுக்கு 1 போட்டி தடையுடன் 30,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

அத்;துடன், உலகக் கிண்ணத்தின்; போது நடந்த பல்வேறு சம்பவங்கள் மற்றும் பாரபட்சமான கோஷங்கள் காரணமாக அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்புக்கு 110,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes