International22 August 2026

வெள்ளை மாளிகையின் கட்டுமானப் பணிகளை இப்போதைக்கு தொடர அனுமதி

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், தனது வெள்ளை மாளிகை மண்டபத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை இப்போதைக்குத் தொடர்வதற்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று அனுமதித்தது.

இதன் மூலம், அந்த திட்டத்தின் பெரும்பாலான கட்டுமானப் பணிகளை நிறுத்தவிருந்த ஒரு நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

நிர்வாகத் தடை உத்தரவைக் கொண்டு, இந்த நடவடிக்கை, திட்டத்தை நிறுத்தக் கோரி ஒரு வரலாற்றுப் பாதுகாப்பு அமைப்பு ஒன்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

வோஷிங்டனில்; அவசரகால வழக்குகளைக் கையாளும் தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

காங்கிரஸின் குறிப்பிட்ட ஒப்புதலைப் பெறாமல், நிர்வாகம் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டு, 90,000 சதுர அடி அளவைக்கொண்ட மண்டபத்தைக் ட்ரம்ப் நிர்வாகம் ஆரம்பி;த்துள்ளது.

இந்தநிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, தேசிய வரலாற்றுப் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கருத்துரைக்கையில்,இது அரசாங்கத்தின் தடை உத்தரவு விண்ணப்பத்தின் தகுதிகள் மீதான இறுதி முடிவு அல்ல, தாம் அடுத்தகட்ட நடவடிக்கக்காகக் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes