யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்காக வாணவேடிக்கைகளை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பண்டத்தரிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாணவேடிக்கையின்போது கண்களில் பாதிப்பு ஏற்பட்ட நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 21 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கண்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக உணர்ந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!
Local
22 August 2026
விழாக்களில் கண்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்!
Local
22 August 2026
எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி
Local
22 August 2026
80,000 வேலைவாய்ப்புகள் எங்கே? போர்ட் சிட்டி திட்டம் குறித்து சாணக்கியன் கேள்வி
Local
22 August 2026
நெடுந்தீவு மட்டக் குதிரைகளுக்கு குடிநீர் வழங்கும் இலங்கை கடற்படை!
Local
22 August 2026
விதிமுறை மீறல்: லியோனல் மெஸ்ஸிக்கு அபராதம் விதித்த MLS!
Local
22 August 2026
விக்கெட்டை வீழ்த்திய பின் வீராங்கனை செய்த கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரல்!
Local
22 August 2026
லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் கல்விப் புலமைப்பரிசில் திட்டம்!
Local
22 August 2026
Comeback கொடுப்பதில் நாம் Specialist : ஸ்டாலின் தெரிவிப்பு
Local
22 August 2026
54 வயதில் இரண்டாவது திருமணம் – 39 வயது காதலியை கரம் பிடித்த பிரபல பொலிவுட் நடிகர்
Local
22 August 2026