போர்ட் சிட்டி எனப்படும் துறைமுக திட்டம் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சாதாரண குடிமகன் ஒருவர் விவசாயம் அல்லது தொழில்முயற்சிக்காக அரசாங்கத்திடம் காணியைக் குத்தகைக்கு பெற்று, 10-15 வருடங்களாக உறுதியளிக்கப்பட்ட திட்டங்களை முன்னெடுக்காவிட்டால் அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.
ஆனால், போர்ட் சிட்டி திட்டத்தில் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என தெரிவித்தார்.
ஆனால், போர்ட் சிட்டி திட்டத்தில் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என தெரிவித்தார்.
போர்ட் சிட்டி திட்டம் மூலமாக 80,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் ஈர்க்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நாட்டின் இளைஞர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை தொடர்கிறது.
போர்ட் சிட்டி ஆணைக்குழுவில் உள்ள சில அதிகாரிகளுக்கு மாதத்திற்கு 10 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை அதிகளவிலான வேதனம் வழங்கப்படுகிறது.
அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச வேதன அளவிற்குக்கூட போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்குப் போதிய வருமானம் கிடைக்கப்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றச்சாட்டியுள்ளார்.
Latest News
டோக்கியோவில் குலுங்கிய உயரமான கட்டிடங்கள்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!
Local
23 August 2026
BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! 'நமஸ்தே இந்தியா' என வைரலாகும் விளம்பர காணொளி!
Local
23 August 2026
தொடருந்து நிலைய அதிகாரியான பூனை! மும்பை மெட்ரோவின் வைரல் 'தலைமைப் பூனை அதிகாரி'!
Local
23 August 2026
"நயன்தாரா படம் பார்க்க அடித்துப் பிடித்து நுழைவுச்சீட்டு வாங்கிய கவின்: வைரலாகும் சுவாரஸ்ய தகவல்!"
Local
23 August 2026
வாடகை வீடு தேடச் சென்று AI நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெற்ற இளம்பெண்: சுவாரஸ்ய சம்பவம்!"
Local
23 August 2026
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் மீன் வளர்ப்பு திட்டம்: மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும் வாய்ப்பு
Local
23 August 2026
தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கம்பஹா பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
Local
23 August 2026
வங்காள விரிகுடாவில் 24 பணியாளர்களுடன் மூழ்கியது பனாமா சரக்குக் கப்பல்: இந்தியப் படைகள் தீவிர மீட்பு நடவடிக்கை!
Local
22 August 2026
இலங்கையின் தில்ஹானி மற்றும் ஷானிகா பதக்கங்களை வென்று சாதனை!
Local
22 August 2026
வடக்கு – கிழக்கில் இணைந்த சுயாட்சி தீர்வு அவசியம்: ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்!
Local
22 August 2026