பாலுக்குப் பதிலாக தாவர எண்ணெய்கள் மற்றும் இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'எனலொக் பன்னீர்' (Analogue Paneer) எனும் செயற்கைப் பன்னீரை 'பன்னீர்' என்ற பெயரில் விற்பனை செய்ய இந்தியாவின் கர்நாடக மாநில அரசு ஓராண்டு காலத்துக்குத் தடை விதித்துள்ளது.
மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த செயற்கைப் பன்னீரைத் தயாரித்தல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதைத் தடை செய்து கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அசல் பன்னீர் என்பது பாலில் இருந்து மட்டுமே தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும். ஆனால், பாலில் உள்ள கொழுப்புக்கு பதிலாகத் தாவர எண்ணெய் அல்லது கொழுப்புகளைக் கலந்து தயாரிக்கப்படும் பொருட்கள் 'பன்னீர்' என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படக் கூடாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
உணவு வணிகத்தில் ஈடுபட்டுள்ள உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகள் செயற்கைப் பன்னீரைப் பயன்படுத்தவோ, சேமிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது எனக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த செயற்கைப் பன்னீரைத் தயாரித்தல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதைத் தடை செய்து கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அசல் பன்னீர் என்பது பாலில் இருந்து மட்டுமே தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும். ஆனால், பாலில் உள்ள கொழுப்புக்கு பதிலாகத் தாவர எண்ணெய் அல்லது கொழுப்புகளைக் கலந்து தயாரிக்கப்படும் பொருட்கள் 'பன்னீர்' என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படக் கூடாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
உணவு வணிகத்தில் ஈடுபட்டுள்ள உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகள் செயற்கைப் பன்னீரைப் பயன்படுத்தவோ, சேமிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது எனக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!
Local
26 August 2026
சிறைச்சாலை விடுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட கைதி உந்துருளியுடன் தப்பியோட்டம்
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 384 பயணிகள் மாயம்!
Local
26 August 2026
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இலங்கை அணி தொடர்ந்தும் தடுமாற்றம்
Local
26 August 2026
செப்டம்பர் 14 முதல் யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும்
Local
26 August 2026
கடந்த 24 மணி நேரத்தில் சோகம்: வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு!
Local
26 August 2026
3 பிள்ளைகளுக்கு அப்பாவான பின் திடீர் திருமணம் : தடகள உலகை அதிரவிட்ட உசைன் போல்ட்டின் காதலுக்கு கிடைக்கும் மகுடம்!
Local
26 August 2026
அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது - ஆனந்த விஜேபால
Local
26 August 2026
சமூக வலைத்தள சர்ச்சைகள் : நடிகை தர்ஷா குப்தா மீது வழக்கு பதிவு
Local
26 August 2026
எல்நினோ காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவில் குடிநீர் தட்டுப்பாடு
Local
26 August 2026