முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சீனாவிடமிருந்து தரம் குறைந்த 20,000 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சில நபர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வேறு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அளுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கொழும்பு பிரதான நீதிவான் அசாங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால், விசாரணையை நிறைவு செய்து தொடர்புடைய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசத்தை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் கோரினர்.
சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிவான், வழக்கை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
Latest News
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 384 பயணிகள் மாயம்!
Local
26 August 2026
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இலங்கை அணி தொடர்ந்தும் தடுமாற்றம்
Local
26 August 2026
செப்டம்பர் 14 முதல் யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும்
Local
26 August 2026
கடந்த 24 மணி நேரத்தில் சோகம்: வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு!
Local
26 August 2026
3 பிள்ளைகளுக்கு அப்பாவான பின் திடீர் திருமணம் : தடகள உலகை அதிரவிட்ட உசைன் போல்ட்டின் காதலுக்கு கிடைக்கும் மகுடம்!
Local
26 August 2026
அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது - ஆனந்த விஜேபால
Local
26 August 2026
சமூக வலைத்தள சர்ச்சைகள் : நடிகை தர்ஷா குப்தா மீது வழக்கு பதிவு
Local
26 August 2026
எல்நினோ காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவில் குடிநீர் தட்டுப்பாடு
Local
26 August 2026
நகைப் பிரியர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு : இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
Local
26 August 2026
போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 726 சந்தேக நபர்கள் கைது!
Local
26 August 2026