நாட்டின் நீதித்துறையை முடுக்கிவிட்டு, மக்களுக்கு விரைவான நீதியை வழங்குவதற்காகவே அரசியலமைப்பில் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மிலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சில தரப்பினரால் சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொதுமக்கள் எவருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது என உறுதியளித்தார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடப்பது குறித்துக் கவலை வெளியிட்ட அவர், 2006ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு 2026ஆம் ஆண்டில் தீர்ப்பு கிடைப்பதையோ அல்லது 2006ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2017ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்பது ஆண்டுகளாக ஒரு சாட்சியம்கூட விசாரிக்கப்படாமல் இருப்பதையோ சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தாமதங்கள் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எக்காரணம் கொண்டும் விமர்சனங்களுக்காக மாற்றப்பட மாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் எழக்கூடிய குறைகளைத் திருத்திக்கொள்ளத் தற்போதைய அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மக்களின் குரலுக்குச் செவிமடுக்கும் அரசாங்கமாக இது செயற்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
தேசிய மிலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சில தரப்பினரால் சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொதுமக்கள் எவருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது என உறுதியளித்தார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடப்பது குறித்துக் கவலை வெளியிட்ட அவர், 2006ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு 2026ஆம் ஆண்டில் தீர்ப்பு கிடைப்பதையோ அல்லது 2006ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2017ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்பது ஆண்டுகளாக ஒரு சாட்சியம்கூட விசாரிக்கப்படாமல் இருப்பதையோ சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தாமதங்கள் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எக்காரணம் கொண்டும் விமர்சனங்களுக்காக மாற்றப்பட மாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் எழக்கூடிய குறைகளைத் திருத்திக்கொள்ளத் தற்போதைய அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மக்களின் குரலுக்குச் செவிமடுக்கும் அரசாங்கமாக இது செயற்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
Latest News
தக்காளிக் குளியலில் திளைத்த ஸ்பெயின் - கோலாகலமாக நடைபெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா
Local
28 August 2026
உச்சக்கட்ட திருப்பம்: சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!
Local
28 August 2026
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்துச் சேவைகளில் பாதிப்பு
Local
28 August 2026
தமிழகத்தில் நலத்திட்டங்களை சொந்தப்பணத்தில் செய்யும் விஜய்?
Local
28 August 2026
உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், இலங்கைக்கு 120 ஆவது இடம்
Local
28 August 2026
இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்
Local
28 August 2026
பெண்கள், குழந்தைகளின் அந்தரங்க படங்களை பகிர்ந்தவர் கைது !
Local
28 August 2026
முன்னாள் ஆண் கிரிக்கெட் வீரர், அவுஸ்திரேலிய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி!
Local
28 August 2026
இன்றும் எச்சரிக்கை நிலைக்கு செல்லும் வெப்பநிலை!
Local
28 August 2026
22 தொடர்பில் மீண்டும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Local
28 August 2026