ஈரான் மீதான புதிய அமெரிக்கத் தடைகள் "அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதச் செயல்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர், பாதுகாப்புச் சபை மற்றும் அனைத்து ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கும் அவர் உத்தியோகபூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
போர் மூலமாகவும், ஏனைய முயற்சிகளிலும் தோல்வியடைந்த பின்னரே, ஈரானின் சட்டபூர்வமான பொருளாதாரத் தொடர்புகளைத் துண்டிக்க அமெரிக்கா முற்பட்டுள்ளதாக அக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தடைகள் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், இது மனித உரிமைகளான உயிர்வாழும் உரிமை, சுகாதாரம் மற்றும் உணவுக்கான உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் ஒருபக்கக் கட்டாய நடவடிக்கைகள் மற்றும் இரண்டாம் நிலைத் தடைகளைக் கடுமையாகக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் இந்தத் தடைகளை உறுப்பு நாடுகள் எவையும் அங்கீகரிக்கவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
மாணவர்களை நாடுகடத்த முயன்ற ட்ரம்ப் அரசு : நீதிமன்றம் கொடுத்த அதிரடி அதிர்ச்சித் தீர்ப்பு!
உறவுகளைத் தேடி உணர்வுபூர்வ பேரணி - யாழ்ப்பாணத்தில் திரண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள்!
நகை வாங்குவோருக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தி : சடாரென சரிந்த தங்க விலை!
திருகோணமலையில் கனரக வாகனத்துடன் உந்துருளி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
கழிவறைக்குச் சென்ற நபர் : வீட்டிற்குள் நின்ற இரண்டு கரடிகள் - அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி!
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: 675 உடலங்கள் மீட்பு; 2,400க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
விஜய்க்கு த்ரிஷாவின் ரக்க்ஷா பந்தன் வாழ்த்து : "இத்தனை நாள் பேசியவர்களுக்கு இதுவே பதில்..." - வைரல் பதிவும் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மையும்!
வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு திரும்புவோருக்கு விசேட பேருந்து , தொடருந்து சேவைகள் ஆரம்பம்!
விசாரணைக்கு விரைவில் முன்னிலையாவார் ரவி கருணாநாயக்க - சட்டத்தரணிகள் உறுதி!