ஈரான் மீதான புதிய அமெரிக்கத் தடைகள் "அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதச் செயல்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர், பாதுகாப்புச் சபை மற்றும் அனைத்து ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கும் அவர் உத்தியோகபூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
போர் மூலமாகவும், ஏனைய முயற்சிகளிலும் தோல்வியடைந்த பின்னரே, ஈரானின் சட்டபூர்வமான பொருளாதாரத் தொடர்புகளைத் துண்டிக்க அமெரிக்கா முற்பட்டுள்ளதாக அக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தடைகள் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், இது மனித உரிமைகளான உயிர்வாழும் உரிமை, சுகாதாரம் மற்றும் உணவுக்கான உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் ஒருபக்கக் கட்டாய நடவடிக்கைகள் மற்றும் இரண்டாம் நிலைத் தடைகளைக் கடுமையாகக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் இந்தத் தடைகளை உறுப்பு நாடுகள் எவையும் அங்கீகரிக்கவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
விடுதலை சிறுத்தைகள் இன்று பெருத்தைகள் - நடிகர் பார்த்தீபன்
பமுனுகம - எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்ற தாய், அவரது மகள் மற்றும் சிறுமியின் உடலங்கள் மீட்பு
வாக்களித்தவர்களுக்கு உண்மையாக இருக்க விஜய் செய்த காரியம்
தோனியின் ஹெலிகொப்டர் ஷொட்: செய்து காட்டிய பிரசாந்த் வீர்
உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஐ.நா. கேள்விகளுக்கு அரசு உரிய பதிலளிக்கவில்லை - அஜித் பி. பெரேரா குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
விஜய் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி விடுவோம்: காங்கிரஸின் அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்
ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்
பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்