ஈரான் மீதான புதிய அமெரிக்கத் தடைகள் "அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதச் செயல்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர், பாதுகாப்புச் சபை மற்றும் அனைத்து ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கும் அவர் உத்தியோகபூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
போர் மூலமாகவும், ஏனைய முயற்சிகளிலும் தோல்வியடைந்த பின்னரே, ஈரானின் சட்டபூர்வமான பொருளாதாரத் தொடர்புகளைத் துண்டிக்க அமெரிக்கா முற்பட்டுள்ளதாக அக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தடைகள் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், இது மனித உரிமைகளான உயிர்வாழும் உரிமை, சுகாதாரம் மற்றும் உணவுக்கான உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் ஒருபக்கக் கட்டாய நடவடிக்கைகள் மற்றும் இரண்டாம் நிலைத் தடைகளைக் கடுமையாகக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் இந்தத் தடைகளை உறுப்பு நாடுகள் எவையும் அங்கீகரிக்கவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
களுத்துறை – பயாகலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!
பயாகல - கொஸ்ஹேன பகுதியில் துப்பாக்கிச் சூடு!
ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ 'ஐஸ்' போதைப்பொருள் மீட்பு: இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!
22 ஆவது திருத்தச்சட்டமூலம் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது : அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் - சஜித்!
அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!
என் மகன் தீவிரவாதி அல்ல" - நடிகர் யாஷின் தாயார் புஷ்பா ஆதங்கம்
சுடுபடைக்கலன்கள் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
தேசியப் பட்டியல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் – ரவூப் ஹக்கீம் விளக்கம்!