கடமை நேரங்களின் போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடருந்து இயக்க நடவடிக்கைகள் தொடர்பான உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுப்பது தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட குறித்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் சில அதிகாரிகளும் ஊழியர்களும் கடமை நேரங்களிலும் அதற்குத் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதன் மூலம் தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகள் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் இந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து திணைக்கள உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட குறித்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் சில அதிகாரிகளும் ஊழியர்களும் கடமை நேரங்களிலும் அதற்குத் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதன் மூலம் தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகள் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் இந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து திணைக்கள உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Latest News
திருநங்கை கிரிக்கெட் வீரர் அனயா பங்கருக்கு அவுஸ்திரேலியாவின் அங்கீகாரம் : எதிர்ப்பு தெரிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை!
Local
29 August 2026
ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு
Local
29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு – இந்திய ஆற்றில் மிதந்து வந்த உடலங்கள்
Local
29 August 2026
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' மாநில ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : முன்னாள் நிதியமைச்சர் கூற்று!
Local
29 August 2026
தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி நமீபியா வரலாற்று வெற்றி: முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரில் அபாரம்!
Local
29 August 2026
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு
Local
29 August 2026
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிரடி மாற்றங்கள் – உதயநிதியின் கைகளுக்குச் செல்லும் அதிகாரங்கள்?
Local
29 August 2026
வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு
Local
29 August 2026
சோனியாவின் சுயசரிதையை இந்தியாவில் வெளியிடவில்லை – பென்குயின் ரேண்டம் ஹவுஸ் விளக்கம்
Local
29 August 2026
2029இல் பிரதமர் வேட்பாளர் விஜய்? காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொள்ளுமா? தமிழக அரசியலில் பரபரப்பு
Local
29 August 2026