General28 August 2026

22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு தலையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

புதிய சிங்கள உறுரிமைக் கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், ஓய்வுபெற்ற உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கே. சரத் லால் பெரேரா மற்றொரு மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.

இந்தச் சட்டமூலம் சட்டப்பூர்வமான முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுக் காட்டும் மனுக்கள், இதற்காக சர்வஜன வாக்கெடுப்பு எதும் நடத்தப்படாமல் இதனை நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றைக் கோரியுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes