திட்டமிட்ட குற்றக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ரூ. 6,000 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் தங்கியிருந்த 66 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களையும் உள்ளடக்கி, திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நிலுவையில் உள்ள 113 விசாரணைகளின் அடிப்படையில் இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான ரூ. 5,423 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 நபர்களுக்குச் சொந்தமான ரூ. 209 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரமிட் நிதி மோசடி மற்றும் வெடிபொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேரின் ரூ. 367 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட சொத்துக்களுள் 2 கிலோகிராம் 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணி, 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குகின்றன.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பிறகு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில், 28 பேர் சர்வதேச சிவப்பு அறிவித்தல்(Red Notice) பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும், 38 பேர் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்படாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு சர்வதேசக் காவல்துறையின் ஊடாக சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக புதிதாக 110 சிவப்பு எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதிய நிலவரப்படி காவல்துறையினரால் பிறப்பிக்கப்பட்ட மொத்த சிவப்பு எச்சரிக்கைகளின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.
பெறப்பட்ட சிவப்பு அறிவித்தல்களில் 96 அறிவித்தல்கள் திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களு்க்காக பெறப்பட்டவை ஆகும்.
அதில் 35 சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் 18 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், 11 பேர் இந்தியாவிலும் மறைந்து வாழ்கின்றனர். மேலும் பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒரு சந்தேகநபர் வீதம் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் தங்கியிருந்த 66 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களையும் உள்ளடக்கி, திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நிலுவையில் உள்ள 113 விசாரணைகளின் அடிப்படையில் இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான ரூ. 5,423 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 நபர்களுக்குச் சொந்தமான ரூ. 209 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரமிட் நிதி மோசடி மற்றும் வெடிபொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேரின் ரூ. 367 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட சொத்துக்களுள் 2 கிலோகிராம் 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணி, 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குகின்றன.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பிறகு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில், 28 பேர் சர்வதேச சிவப்பு அறிவித்தல்(Red Notice) பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும், 38 பேர் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்படாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு சர்வதேசக் காவல்துறையின் ஊடாக சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக புதிதாக 110 சிவப்பு எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதிய நிலவரப்படி காவல்துறையினரால் பிறப்பிக்கப்பட்ட மொத்த சிவப்பு எச்சரிக்கைகளின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.
பெறப்பட்ட சிவப்பு அறிவித்தல்களில் 96 அறிவித்தல்கள் திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களு்க்காக பெறப்பட்டவை ஆகும்.
அதில் 35 சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் 18 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், 11 பேர் இந்தியாவிலும் மறைந்து வாழ்கின்றனர். மேலும் பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒரு சந்தேகநபர் வீதம் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
மாத்தறையில் பெருமளவு ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இருவர் கைது!
Local
05 September 2026
செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
Local
05 September 2026
தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் சிக்கியிருந்த மேலும் மூவரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
Local
05 September 2026
“நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் - செப்.12 கூட்டத்தை தடுக்க முடியாது”
Local
05 September 2026
அமெரிக்காவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு!
Local
05 September 2026
நேபாள அனர்த்தம்: 10 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீனர் உயிருடன் மீட்பு
Local
05 September 2026
பாடசாலை சின்னங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளில் மது மற்றும் போதைப்பொருட்களுக்குத் தடை!
Local
05 September 2026
மலையேற்ற வீரர்களின் சிறுநீரும் எவரெஸ்ட் பனிப்பாறை உருகுவதற்கு ஒரு காரணமாம்!
Local
05 September 2026
யு.எஸ். ஓபன் டென்னிஸ்: மீண்டும் இணைந்த வீனஸ் - செரீனா வில்லியம்ஸ் ஜோடி!
Local
05 September 2026
ஈரான் மோதல் ஒரு பெரிய விடயமே அல்ல : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து!
Local
05 September 2026