சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, ஹக்கல பகுதியில் தாவரப் பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்குச் சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஹக்கல தாவரவியல் பூங்காவை அண்மித்து புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தலைமையில் அண்மையில் விசேட கள விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த விஜயம் இடம்பெற்றது.
இதன்போது ஹக்கல பிரதேசத்தின் தனித்துவமான புவியியல் அமைப்புக்குரிய தாவரங்களைப் பாதுகாப்பதற்காகத் தாவரப் பாதுகாப்பு மையம் ஒன்றையும், ஆய்வுகளுக்கான அடிப்படை ஆய்வகம் ஒன்றையும் நிறுவுவது குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன், இயற்கை அழகைப் பாதுகாத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய நடைபாதைகளைக் கொண்ட சூழல் சுற்றுலா வலயம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இயற்கைச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த சுற்றாடலை 'பூஜ்ஜிய உமிழ்வு' (Zero-Emission) வலயமொன்றாக அபிவிருத்தி செய்யவும், அரிய தாவரங்களைப் பாதுகாக்கப் பசுமை இல்லங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி நிலையான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும், மலைசார் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதுமே இதன் முதன்மை நோக்கம் எனப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹக்கல தாவரவியல் பூங்காவை அண்மித்து புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தலைமையில் அண்மையில் விசேட கள விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த விஜயம் இடம்பெற்றது.
இதன்போது ஹக்கல பிரதேசத்தின் தனித்துவமான புவியியல் அமைப்புக்குரிய தாவரங்களைப் பாதுகாப்பதற்காகத் தாவரப் பாதுகாப்பு மையம் ஒன்றையும், ஆய்வுகளுக்கான அடிப்படை ஆய்வகம் ஒன்றையும் நிறுவுவது குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன், இயற்கை அழகைப் பாதுகாத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய நடைபாதைகளைக் கொண்ட சூழல் சுற்றுலா வலயம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இயற்கைச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த சுற்றாடலை 'பூஜ்ஜிய உமிழ்வு' (Zero-Emission) வலயமொன்றாக அபிவிருத்தி செய்யவும், அரிய தாவரங்களைப் பாதுகாக்கப் பசுமை இல்லங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி நிலையான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும், மலைசார் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதுமே இதன் முதன்மை நோக்கம் எனப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Latest News
கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு அறிவிப்பு
Local
02 September 2026
இலங்கை 'ஏ' அணியில் திக்வெல்ல மற்றும் சாமிக்க: இளம் வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
Local
02 September 2026
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
Local
02 September 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
02 September 2026
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
Local
02 September 2026
கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் - கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
02 September 2026
ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ உடலமாக மீட்பு
Local
02 September 2026
விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பது ராகுல் காந்திதான் - தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய பேச்சு!
Local
02 September 2026
நடிகர் ரஜினியுடன் நடனமாடும் கயாடு லோஹர்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Local
02 September 2026
ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல் : ஹோர்முஸ் நீரிணை அருகே மீண்டும் தொடரும் மோதல்!
Local
02 September 2026