அரசாங்கத்தின் "பிரஜா சக்தி" தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபா பெறுமதியான 786 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முனேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் 296.19 மில்லியன் ரூபாய் செலவில் 263 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களும், 543.22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 286 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் குறைந்தது ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் ஊடாக "பிரஜா சக்தி" வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதன்கீழ், நாடு முழுவதும் 8,323 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 7,323 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 22.425 பில்லியன் ரூபாய் பெறுமதியான 15,646 திட்டங்கள் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொதுநிதி ஒழுக்கத்தைப் பேணி, பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைப்பதை உறுதிசெய்து, இந்த அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முனேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் 296.19 மில்லியன் ரூபாய் செலவில் 263 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களும், 543.22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 286 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் குறைந்தது ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் ஊடாக "பிரஜா சக்தி" வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதன்கீழ், நாடு முழுவதும் 8,323 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 7,323 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 22.425 பில்லியன் ரூபாய் பெறுமதியான 15,646 திட்டங்கள் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொதுநிதி ஒழுக்கத்தைப் பேணி, பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைப்பதை உறுதிசெய்து, இந்த அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Latest News
22ஆவது திருத்தச் சட்டமூல மனுக்கள் மீதான பரிசீலனை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!
Local
01 September 2026
பிரபல நடிகருக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி : அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கவலை!
Local
01 September 2026
ரொஷான் அமரசிங்க CID பணிப்பாளராக நியமனம்!
Local
01 September 2026
நகைப் பிரியர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு : இன்றைய தங்க விலை நிலவரம் இதோ!
Local
01 September 2026
சுயசரிதை எழுதுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!
Local
01 September 2026
மேசை பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் தாவி சமரவீர
Local
01 September 2026
ஹோர்ட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
Local
01 September 2026
இந்திய கிரிக்கட்டுக்குள் நுழையும் ஜூனியர் சுரேஸ் ரெய்னா
Local
01 September 2026
மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரம்: பரிந்துரைக்காக அறுவர் கொண்ட குழு நியமனம்!
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!
Local
01 September 2026