General30 August 2026

நுவரெலியா மாவட்டத்துக்கு ரூ. 997 மில்லியன் பெறுமதியான 786 புதிய அபிவிருத்தித் திட்டங்கள்!

அரசாங்கத்தின் "பிரஜா சக்தி" தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபா பெறுமதியான 786 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முனேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் 296.19 மில்லியன் ரூபாய் செலவில் 263 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களும், 543.22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 286 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் குறைந்தது ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் ஊடாக "பிரஜா சக்தி" வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதன்கீழ், நாடு முழுவதும் 8,323 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 7,323 உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 22.425 பில்லியன் ரூபாய் பெறுமதியான 15,646 திட்டங்கள் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுநிதி ஒழுக்கத்தைப் பேணி, பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைப்பதை உறுதிசெய்து, இந்த அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes