General31 August 2026

கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ 'ஐஸ்' போதைப்பொருள் மீட்பு: இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இரண்டு பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிகப்பெரிய அளவிலான குறித்த போதைப்பொருட்கள் துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு வலைப்பின்னல் குறித்தும், கைதானவர்களுக்கும் கடத்தலுக்கும் இடையிலான நேரடித் தொடர்புகள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes