General02 September 2026

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு அறிவிப்பு

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் பல பிராந்தியங்களில் நாளை (03) இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8.00 மணி வரை 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, நுகேகொடை, கொஹுவளை, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, ராவத்தை, சொய்சாபுர, அங்குலானை, இந்திபெத்த, கட்டுபெத்த, கல்கெமுல்ல, கொடகாமுல்ல (Modara), கொரளவெல்ல, எகொடோயான மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகள் இந்த நீர்வெட்டுக்கு உள்ளாகவுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் குறித்த பகுதிகளின் நுகர்வோர் அவசியமான நீரை முற்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes