ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தால் ஜனநாயக நீரோட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகும் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இன்று (5) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் பேரணியானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், அந்தப் பேரணிக்கு கிடைத்து வந்த இமாலய மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய அரசாங்கமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக பல சந்தர்ப்பங்களில் காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் முரணான வாக்குமூலங்களை வழங்கியவரும், குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருமான ஒருவரிடமிருந்து அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குமூலமே இந்தத் கைது நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தங்கள் ஆட்சிக் காலத்தில் ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டமை ஊழலை ஒழிப்பதற்காகவே தவிர, அரச நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்து அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு தலைவரைச் சிறையில் அடைத்தாலும் அவரது கொள்கையையும் மக்கள் பலத்தையும் ஒடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன, செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்த்தில் நடத்தப்படவிருந்த மாபெரும் மக்கள் பேரணி திட்டமிட்டபடியே மிகவும் வலிமையுடன் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் குரல்கொடுக்க செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்று திரளுமாறு அந்த அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இன்று (5) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் பேரணியானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், அந்தப் பேரணிக்கு கிடைத்து வந்த இமாலய மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய அரசாங்கமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக பல சந்தர்ப்பங்களில் காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் முரணான வாக்குமூலங்களை வழங்கியவரும், குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருமான ஒருவரிடமிருந்து அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குமூலமே இந்தத் கைது நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தங்கள் ஆட்சிக் காலத்தில் ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டமை ஊழலை ஒழிப்பதற்காகவே தவிர, அரச நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்து அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு தலைவரைச் சிறையில் அடைத்தாலும் அவரது கொள்கையையும் மக்கள் பலத்தையும் ஒடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன, செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்த்தில் நடத்தப்படவிருந்த மாபெரும் மக்கள் பேரணி திட்டமிட்டபடியே மிகவும் வலிமையுடன் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் குரல்கொடுக்க செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்று திரளுமாறு அந்த அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026
விஜய் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்: சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் புதிய விவாதம் – உண்மையைத் தேடும் ரசிகர்கள்!
Local
10 September 2026