ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தால் ஜனநாயக நீரோட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகும் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இன்று (5) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் பேரணியானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், அந்தப் பேரணிக்கு கிடைத்து வந்த இமாலய மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய அரசாங்கமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக பல சந்தர்ப்பங்களில் காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் முரணான வாக்குமூலங்களை வழங்கியவரும், குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருமான ஒருவரிடமிருந்து அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குமூலமே இந்தத் கைது நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தங்கள் ஆட்சிக் காலத்தில் ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டமை ஊழலை ஒழிப்பதற்காகவே தவிர, அரச நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்து அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு தலைவரைச் சிறையில் அடைத்தாலும் அவரது கொள்கையையும் மக்கள் பலத்தையும் ஒடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன, செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்த்தில் நடத்தப்படவிருந்த மாபெரும் மக்கள் பேரணி திட்டமிட்டபடியே மிகவும் வலிமையுடன் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் குரல்கொடுக்க செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்று திரளுமாறு அந்த அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இன்று (5) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் பேரணியானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், அந்தப் பேரணிக்கு கிடைத்து வந்த இமாலய மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய அரசாங்கமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக பல சந்தர்ப்பங்களில் காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் முரணான வாக்குமூலங்களை வழங்கியவரும், குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருமான ஒருவரிடமிருந்து அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குமூலமே இந்தத் கைது நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தங்கள் ஆட்சிக் காலத்தில் ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டமை ஊழலை ஒழிப்பதற்காகவே தவிர, அரச நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்து அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு தலைவரைச் சிறையில் அடைத்தாலும் அவரது கொள்கையையும் மக்கள் பலத்தையும் ஒடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன, செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்த்தில் நடத்தப்படவிருந்த மாபெரும் மக்கள் பேரணி திட்டமிட்டபடியே மிகவும் வலிமையுடன் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் குரல்கொடுக்க செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்று திரளுமாறு அந்த அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
புடாபெஸ்டில் வரலாற்றுச் சமர்: ஈட்டி எறிதலில் உலகின் முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை வீரன்!
Local
07 September 2026
டெங்கு எச்சரிக்கை: உயிரிழப்புகள் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!
Local
07 September 2026
தொடர் பயணங்களால் ஆபத்து: வாசனா யானை தொடர்பில் கதிர்காம தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
07 September 2026
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: ஸ்ரீலங்கன் வானூர்திகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன!
Local
06 September 2026
"அரசாங்கத்தால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது; மக்களும் இணைய வேண்டும்" - டில்வின் சில்வா வலியுறுத்தல்
Local
06 September 2026
புதிய பச்சை நிற இலக்கத் தகடு: அறியாத காவல்துறையினரால் வாகன உரிமையாளர் அசௌகரியம்
Local
06 September 2026
தேயிலை ஏற்றுமதி வருமானத்துக்கு நிகரான 1 பில்லியன் டொலர் கடத்தப்பட்டுள்ளது -ஜனாதிபதி
Local
06 September 2026
வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே வெளிநாடு சென்றார் பிரேமலால் ஜயசேகர: சிஐடி தகவல்
Local
06 September 2026
மின் நுகர்வு குறைவு; மின் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்
Local
06 September 2026
Lanka Chairman's Business Excellence Awards 2026: 'ஹிரு' ஊடகக் குழுமம் பல விருதுகளை வென்று சாதனை!
Local
06 September 2026