ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தால் ஜனநாயக நீரோட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகும் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இன்று (5) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் பேரணியானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், அந்தப் பேரணிக்கு கிடைத்து வந்த இமாலய மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய அரசாங்கமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக பல சந்தர்ப்பங்களில் காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் முரணான வாக்குமூலங்களை வழங்கியவரும், குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருமான ஒருவரிடமிருந்து அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குமூலமே இந்தத் கைது நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தங்கள் ஆட்சிக் காலத்தில் ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டமை ஊழலை ஒழிப்பதற்காகவே தவிர, அரச நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்து அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு தலைவரைச் சிறையில் அடைத்தாலும் அவரது கொள்கையையும் மக்கள் பலத்தையும் ஒடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன, செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்த்தில் நடத்தப்படவிருந்த மாபெரும் மக்கள் பேரணி திட்டமிட்டபடியே மிகவும் வலிமையுடன் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் குரல்கொடுக்க செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்று திரளுமாறு அந்த அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இன்று (5) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் பேரணியானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், அந்தப் பேரணிக்கு கிடைத்து வந்த இமாலய மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய அரசாங்கமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக பல சந்தர்ப்பங்களில் காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் முரணான வாக்குமூலங்களை வழங்கியவரும், குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருமான ஒருவரிடமிருந்து அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குமூலமே இந்தத் கைது நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தங்கள் ஆட்சிக் காலத்தில் ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டமை ஊழலை ஒழிப்பதற்காகவே தவிர, அரச நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்து அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு தலைவரைச் சிறையில் அடைத்தாலும் அவரது கொள்கையையும் மக்கள் பலத்தையும் ஒடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன, செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்த்தில் நடத்தப்படவிருந்த மாபெரும் மக்கள் பேரணி திட்டமிட்டபடியே மிகவும் வலிமையுடன் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் குரல்கொடுக்க செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்று திரளுமாறு அந்த அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
நான் போர்க் குற்றவாளியல்ல, ஆதாரத்துடன் நிரூபித்தால் ஏற்றுக்கொள்ள தயார் – சவேந்திர சில்வா
Local
08 September 2026
விஜய்யின் 'சுறா' பட நகைச்சுவைக் காட்சி - வைரலாகும் உதயநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவு
Local
08 September 2026
உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் இந்த வாரம் அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!
Local
08 September 2026
அமெரிக்கா - ஈரான் போரினால், எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு
Local
08 September 2026
நாடாளுமன்றம் வர நாமலுக்கு அனுமதி!
Local
08 September 2026
“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !
Local
08 September 2026
மேற்குக் கரைப் பாடசாலைகளில் பாலஸ்தீன பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் வன்முறையும்!
Local
08 September 2026
பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம் விதிப்பு!
Local
08 September 2026
ஈரானின் உள்நாட்டு நிலவரம் மற்றும் மோதல்கள்!
Local
08 September 2026
கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு அறிவித்துள்ள ட்ரம்ப்!
Local
08 September 2026